சிஏஜி அறிக்கையும், பாஜகவின் திசைதிருப்பலும் எனும் பொருளில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி., பேசியதிலிருந்து...
அதானி துறைமுகத்தில் பிடிபட்ட 24ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளின் நிலை என்ன என்று கேட்பதற்குள் நாடாளுமன்றத்தில் எனது மைக் அணைக்கப்பட்டது. பிரதமர் அவைக்குள் வரும்போது பாஜக உறுப்பினர்கள் மேசையை தட்டி, மோடி மோடி என்று கத்துவார்கள். எதிர்க்கட்சிகள் அதானி அதானி என்று முழக்கமிட்டவுடன், அந்தக் குரல் நின்றுவிடுகிறது. அதானியை எதிர்கொள்வது சாதாரணமானதல்ல. கம்யூ னிஸ்ட்டுகளால் மட்டும்தான் எந்த சமரசமும் இல்லாமல், வர்க்கத் திமிரோடு, தேச நலனோடு கார்ப்பரேட்டுகள், ஏகாதிபத்தியங்களின் சங்கை நெருக்கிப் பிடிக்க முடிகிறது. மக்களின் செல்வத்தை சூறையாடும் கயவர்களோடு எந்த சமரசமும் இன்றி செயல்பட முடிகிறது.
பாஜக மாடல் டோல்கேட்
பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவரின் முதன்மை செயலாளராக இருந்தவர்தான் தற்போதைய சிஏஜி தலைவர். இதையும் மீறி அறிக்கை வெளிவந்துள்ளது. இந்த சிஏஜி அறிக்கை உலகுக்கு பல ஆச்சரியங்களை, அதிர்ச்சிகளை காட்டியுள்ளது. அதாவது, நிலவுக்கு சந்திரயானை 600கோடி ரூபாயில் அனுப்பவும் முடியும், தரையில் 2 கி.மீ., தூரத்திற்கு சாலையையும் போட முடியும் என்று காட்டியுள்ளது.
அரசு முதலீடு செய்து, தனியார் மூலம் பரனூர் டோல்கேட் டில் (சுங்கச்சாவடி) கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த டோல்கேட்டை (கட்டணமில்லாமல்) பயன்படுத்தியவர்களில் 52 விழுக்காட்டினர் விஐபி-கள் என கணக்கு காட்டியுள்ளனர். கோடரோடு தனியார் டோல்கேட்டை 6 விழுக்காடு விஐபி-க்கள் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். உலகில் வேறு எங்குமே, இப்படி ஒரு டோல்கேட் கிடையாது. எனவே, அந்த டோல்கேட்டிற்கு பாஜக மாடல் டோல்கேட் என்று பெயர் வைக்கலாம்.
பாரத் என்றால் 10 மடங்கு ஊழல்
பாரத் என்று பெயர் வைக்கக்கூடிய திட்டங்களில் 10 மடங்கு ஊழல் நடக்கிறது என்று பொருள். சென்னை - மதுரைக்கு செல்லும் தேஜஸ் ரயிலின் பெயரை மாற்றக் கோரிய போது மறுத்தார்கள். இப்போது ‘வந்தே பாரத்’ என்று ரயிலுக்கு பெயர் வைக்கிறார்கள். இந்த ரயில் வேகமாக செல்கிறது என்பதை காட்டுவதற்காக 13 ரயில்களின் வேகத்தை குறைத்துவிட்டார்கள்.
அடுத்ததாக, படுக்கை வசதியுடன் கூடிய ‘வந்தேபாரத்’ ரயில் விடப்போகிறார்கள். ஐசிஎப் 70 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கிற அந்த ரயிலை, தனியார் மூலம் 120 கோடி ரூபாய்க்கு தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளனர். ஐசிஎப்-க்கு சொந்தமான இடம், கட்டமைப்பு, வடிவமைப்பை பயன்படுத்தி ஒரு ரயிலை 50 கோடி ரூபாய் கூடுதல் செலவில் தனியார் மூலம் தயாரிக்க உள்ளனர். இதன்படி 200 ரயிலை 10 ஆயி ரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவிட்டு தயாரிக்கப் போகின்றனர். பாரத் என்று பெயர் வருகிற திட்டங்களில் 10 மடங்கு ஊழல் நடக்கிறது. ‘தேசிய பெருமுதலாளிகளின் கூட்டு; கூடுமான வரை கோடிகளை அள்ளிக் கொட்டு’ என்பதுதான் மோடியின் முழக்கம்.
பிணங்களுக்கு சிகிச்சை
பாஜக ஆன்மாக்கள் மீது நம்பிக்கை கொண்ட கட்சி. ஆன்மா-வுக்கு உதவிட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பாஜக செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தில் பயன டைந்தவர்களின் பிறந்த வருடம் 1814, 1821, 1841 என்று சிஏஜி கூறியுள்ளது. உலக மக்களுக்கே அதிர்ச்சி கொடுத்துக் கொண்டுள்ளது. இதேபோன்று சுற்றுலாத்துறையிலும் ஊழல் நடந்துள்ளது. சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, இனி அதிகாரிகள் தணிக்கை செய்த அறிக்கையை வெளியிடாமல், சம்பந்தப்பட்ட துறையிடமே கொடுத்துவிட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். 3 தணிக்கை அதிகாரிகள் உள்ளிட்டோர் இடமாற்றம் செய்தவர்கள், அடுத்ததாக, சிறிது காலத்திற்கு தணிக்கை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். 9 வருடம் மோடி ஆட்சி நடந்த பிறகும், முதுகெலும்போடு ஒரு துறை எப்படி இருக்கிறது? என்று ஆளும்கட்சியே அதிர்ச்சியாகப் பார்க்கிறது. இந்த சிஏஜி அறிக்கை மீதான கவனத்தை சிதறடிக்கவே, அண்மையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்பட்டது.
ஜனநாயகம் படுகுழியில்
நாடாளுமன்றத்தின் மையப்பகுதி என்பது ஜனநாய கத்தின் இதயம் போன்றது. அவைத்தலைவரின் கவனத்தை ஈர்க்க உறுப்பினர் மையப்பகுதியில் வந்து பிரச்சனையை எழுப்புவார். கடந்த நான்கரை ஆண்டுகளில் நாங்கள் இருக்கையில் நின்றதைவிட, மையப்பகுதியில் நின்ற நேரமே அதிகம். இதனால் மோடி, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மையப்பகுதியை 4 அடி பள்ளமாக வைத்து கட்டியுள்ளார். ஜனநாயகத்தின் குரல் எப்படியெல்லாம் நசுக்கப்படும் என்பதை புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மூலம் காட்டி வருகிறார்.
நாடாளுமன்றத்தின் கடைசிநாளில், டேனிஷ் அலியை, பாஜக உறுப்பினர் ரமேஷ் பிதூரி தேசத் துரோகி என்பது உள்ளிட்ட வார்த்தைகளால் திட்டுகிறார். எங்களை குறைந்தது 45 முறையாவது தேசத் துரோகி என்று கூறியிருப்பார்கள். அதில் ஆச்சரியமில்லை. 1947க்கு முன்பு வரை நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களை பிரிட்டிஷார் தேசத் துரோகி என்றனர். இன்றைக்கு தேசத்திற்காக குரல் கொடுப்ப வர்களை பாஜக தேசத் துரோகி என்கிறது.
ரமேஷ் பிதூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டேனிஷ் அலியும், கனிமொழியும், நானும் கடிதம் கொடுத்துள்ளோம். அதன்மீது நடவடிக்கை இல்லை. அதானி பிரச்சனையை எழுப்பிய மஹூவா மொய்த்ரா மீது, பாஜக உறுப்பினர் ரிஷிகாந்த்துபே கொடுத்த புகாரின் பேரில் அக்.26ஆம் தேதி அவை ஒழுங்கு நெறிமுறைக்குழு (எத்திக்கல் கமிட்டி) கூடுகிறது. அரசியல் எதிரிகளை சுட்டுக் கொல்வோம் என்று பேசிய இணை அமைச்சர் அனுராக் தாகூரை கேபினட் அமைச்சர் ஆக்கினார்கள். அதேபோன்று வெறுப்பை கக்கிய ரமேஷ் பிதூரியை, ராஜஸ்தான் தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளார்கள்.
மெகா ஊழல்களை மறக்கடிக்க வெறுப்பு என்ற நிரந்தர நெருப்புக்குள் இந்தியாவை தள்ள நினைக்கிறார் கள். எனவேதான், புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் 40 அடி உயர சாணக்கியரின் உருவத்தை வைத்துள்ளனர். வழிபாட்டுத் தலங்களுக்காக 15